இந்தியாவில் கொரோனாவுக்கு 817 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா இறப்பு எண்ணிக்கை 3-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
x
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்றைய தினம் மேலும் 45 ஆயிரத்து 951 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளதை தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 3 லட்சத்து 62 ஆயிரமாக அதிகரித்துள்ளது. 

கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 817 பேர் இறந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு மூன்று லட்சத்து 98 ஆயிரமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 729 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஐந்து லட்சத்து 37 ஆயிரத்து 64 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 33 கோடியே 28 லட்சத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்