பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கியது...

கேரளாவில் இன்று முதல் பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கியது...
x
பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கியது... 

கேரளாவில் இன்று முதல் பேருந்து, படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, மே மாதம் 8ஆம் தேதி முதல் கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பேருந்து, படகு போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.  இந்நிலையில், இன்று முதல் தளர்வுகள் வழங்கப்பட்டதால் மாநிலம் முழுவதும் தேவைக்கேற்ப பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இதேபோல், 50 விழுக்காடு பயணிகளுடன் படகு போக்குவரத்தும் தொடங்கியது. பயணிகள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்