காதலியை மறைத்து வைத்து வாழ்க்கை... 10 ஆண்டுகள் அறையில் அடைத்த சம்பவம்

கேரளாவை சேர்ந்த இளைஞர் 10 ஆண்டுகளாக காதலியை அறையில் மறைத்து வைத்து, வாழ்க்கை நடத்திய விவகாரத்தில், மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
காதலியை மறைத்து வைத்து வாழ்க்கை... 10 ஆண்டுகள் அறையில் அடைத்த சம்பவம்
x
காதலியை மறைத்து வைத்து வாழ்க்கை... 10 ஆண்டுகள் அறையில் அடைத்த சம்பவம் 

கேரளாவை சேர்ந்த இளைஞர் 10 ஆண்டுகளாக காதலியை அறையில் மறைத்து வைத்து, வாழ்க்கை நடத்திய விவகாரத்தில், மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.கேரள மாநிலம், பாலக்காடு அடுத்த அய்லூரை சேர்ந்தவர் ரகுமான். எலக்ட்ரீசியனான இவர் தனது காதலியான சஜிதாவுடன் தனது வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல் 10 ஆண்டுகள் குடும்பம் நடத்தியதாக சமீபத்தில் கூறினார்.கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரத்தால், ரகுமானை தற்போது சட்ட சிக்கல்கள் சூழ்ந்து உள்ளன. சஜிதாவை வீட்டு அறையில் அடைத்து வைத்திருந்தது கொடுஞ்செயல் என்று கூறியுள்ள கேரள மகளிர் ஆணையம், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவும் செய்துள்ளது. மகளிர் ஆணையம் மட்டுமின்றி மாநில இளைஞர் நல ஆணையமும் இவ்விவகாரத்தில் தலையிட்டு உள்ளது. மாநில இளைஞர் நல ஆணையரும், வழக்கறிஞருமான மகேஷ், ரஹ்மான்-சஜிதா இருவரையும் நேரில் சந்தித்து விசாரணை நடத்தி உள்ளார். கேரள மகளிர் ஆணையத்தினரும் இருவரிடமும் விசாரணை நடத்த உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்