காதலியை மறைத்து வைத்த காதலன் - 11 ஆண்டுகளாக ஒரே வீட்டில் தனி குடும்பம்

கேரளாவில் ஒரே வீட்டில் குடும்பத்திற்கு தெரியாமல் இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் 11 ஆண்டுகள் குடும்பம் நடத்திய விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது.
காதலியை மறைத்து வைத்த காதலன் - 11 ஆண்டுகளாக ஒரே வீட்டில் தனி குடும்பம்
x
இருவரும் பார்க்காது காதல், இணைய காதல் என சினிமாவில் காட்டப்பட்ட காதல் காட்சிகள் எல்லாம் தற்போது நிஜமாகி வருகிறது.  ஜானகி ராமன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஒரே வீட்டில் வீட்டுக்கே தெரியாமல், பெண் ஒருவருடன் குடும்பம் நடத்தி குழந்தையும் பெற்றிருப்பார்...கில்லி படத்தில் ஹீரோ விஜய், திரிசாவை வீட்டில் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய அறையில் மறைத்து வைத்திருப்பார்... தற்போது அதுபோன்ற சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயிலூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரகுமான். கடந்த 2010-ம் ஆண்டு தான் காதலித்த சஜிதா என்ற பெண்ணை வீட்டில் ஆளில்லாத போது அழைத்து வந்து மறைத்து வைத்து உள்ளார்.அப்போது 18 வயதே ஆயிருந்த சஜிதாவை காணவில்லை என அவரது பெற்றோர் கொடுத்த புகாரில் விசாரித்த நெம்மாரா போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை...தனது காதலியை, பெற்றோர், தம்பி, தங்கை பார்த்துவிடாத வகையில் தன்னுடைய அறையில் பல பாதுகாப்பு ஏற்பாடுகளை ரகுமான் செய்துள்ளார். தன்னுடைய அறையின் கதவை யாரும் தொட்டால் ஷாக் அடிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.எலக்ட்ரிஷீஸியான ரகுமான் தன்னுடைய அறையின் கதவை சுவிட்சை அழுத்தினால் திறக்கும் வகையில் மாற்றியிருக்கிறார்.காதலி வேறு யாருக்கும் தெரியாமல் குளிக்கவும், கழிவறைக்கு செல்லவும் ஏற்ற வகையில் ஜன்னல் கம்பியை அகற்றிவிட்டு பலகை கொண்ட கதவை மட்டும் பொருத்தியுள்ளார். அதனை பயன்படுத்தி வீட்டில் யாரும் இல்லாத போதும், இரவு நேரங்களிலும்  சஜிதா வெளியே வந்திருக்கிறார்.காதலிக்காக டிவி பார்க்கவும் சிறப்பு ஏற்பாட்டை
செய்திருக்கிறார், ரகுமான்கில்லி படத்தில் விஜய் குடும்பத்துடன் இருந்து சாப்பிடாமல், திரிசாவுக்கு உணவை கடத்துவார். அதேபோன்று ரகுமானும் வீட்டில் சமைக்கும் உணவுகளை சஜிதாவுக்கு கடத்தியுள்ளார். ஜானகி ராமன் படத்தில் குழந்தை சத்தம் கேட்கும் போது எல்லாம், செந்திலை ஏமாற்ற கவுண்டமனி படாதபாடு படுவார். இதுபோன்ற பிரச்சினை ஏற்படாமல் இருக்க ரகுமான் தனது அறையில்  டிவி சத்தத்தை அதிகமாக வைத்து பார்த்துள்ளார். இவ்வாறாக பெற்றோருக்கே தெரியாமல் 11 ஆண்டு ஒரே வீட்டில் ரகுமான் குடும்பம் நடத்தியுள்ளார். ஆனால் ரகுமானின் நடவடிக்கைகளை பார்த்து அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் அவரை அடிக்கடி பேய் ஓட்ட அழைத்துச் சென்றுள்ளனர். நிலை விபரீதம் ஆவதை புரிந்துக் கொண்ட ரகுமான் காதலியுடன் வீட்டைவிட்டு வெளியேறி விதானசேரி கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது போலீசில் புகாரளித்துவிட்டு ரகுமானை தேடிய அவருடைய சகோதர், இருவரையும் கண்டுபிடித்ததால் இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.விசாரணையின் போது இந்த கதையை கேட்டு போலீசார் தலைசுற்றி கிறங்கியுள்ளனர். இருவரும் இணைந்து வாழ நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து இனி சுதந்திரமாக வாழப்போவதாக ரகுமானும், சஜிதாவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்