"தடுப்பூசி விரயம் இன்னும் அதிகமாகவே உள்ளது" - பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு வேண்டுகோள்

தடுப்பூசி விரயம் இன்னும் அதிகமாகவே உள்ளதால்,அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசி விரயம் இன்னும் அதிகமாகவே உள்ளது - பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு வேண்டுகோள்
x
தடுப்பூசி விரயம் இன்னும் அதிகமாகவே உள்ளதால்,அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதில்,
உள்துறை அமைச்சர், பாதுகாப்பு துறை அமைச்சர், நிதி அமைச்சர், பிரதமரின் முதன்மைச் செயலாளர், மத்திய அமைச்சரவைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரதமர், பல்வேறு மாநிலங்களில் விரயமாகும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்னும் அதிக அளவிலேயே இருப்பதாக குறிப்பிட்டார். தடுப்பூசி விரயத்தை வெகுவாக குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்