20-ம் தேதி அமைச்சரவை பதவி ஏற்பு - கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆலோசனை
கேரளாவில் அமைச்சரவையில் இட ஒதுக்கீடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்றும், நாளையும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனையை மேற்கொள்கின்றனர்.
கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி 99 இடங்களில் வென்று 2-வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக முதல்வர் பினராஜி விஜயன் முதல் எம்.எல்.ஏ. வரையில் யாரும் பதவி ஏற்கவில்லை. இந்நிலையில் வரும் 20-ம் தேதி திருவனந்தபுரத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அமைச்சரவையில் இட ஒதுக்கீடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இன்றும், நாளையும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனையை மேற்கொள்கின்றனர். அமைச்சரவை பதவி ஏற்பை தொடர்ந்து 24-ம் தேதி எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தவும், 25-ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடத்தவும் கம்யூனிஸ்ட் கூட்டணி தரப்பில் திட்டமிடப்பட்டு வருகிறது.
Next Story