ஆம்புலன்ஸ் வராததால் இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கொரோனா நோயாளி

கேரள மாநிலத்தில், இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஆம்புலன்ஸ் வராததால் இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கொரோனா நோயாளி
x
ஆம்புலன்ஸ் வராததால் இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கொரோனா நோயாளி 

கேரள மாநிலத்தில், இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆலப்புழா அருகே புன்னப்புரா பகுதியில் செயல்பட்டு வரும் கொரோனா பராமரிப்பு மையத்தில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவருக்கு, திடீரென உடல்நிலை மோசமானது. ஆக்சிஜன் மற்றும் மருத்தவர்கள் இல்லாத நிலையில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் திட்டமிட்டனர். உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றனர். இருசக்கர வாகனத்தில் கொரோனா நோயாளியை அழைத்து சென்ற காட்சிகள் தற்போது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்