மகள் கண்முன்னே உயிரிழந்த தந்தை... சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்

ஆந்திராவில் கொரோனா பாதித்த தந்தை, மகளின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மகள் கண்முன்னே உயிரிழந்த தந்தை... சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்
x
மகள் கண்முன்னே உயிரிழந்த தந்தை... சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள் 
 
ஆந்திராவில் கொரோனா பாதித்த தந்தை, மகளின் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே உள்ள ஜகநாத புரத்தைச் சேர்ந்தவர் ஆசிரி நாயுடு. விவசாயியான இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாததால், வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். இந்நிலையில் சம்பவத்தன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு நாயுடு கீழே விழுந்துள்ளார். கொரோனா என்பதால்  மக்கள் இவர் அருகே செல்ல தயங்கி, சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததாக தெரிகிறது. இந்நிலையில்  அவரது மகள் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க , சிறிது நேரத்திலேயே நாயுடு  துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவம் கொரோனாவின் கொடூரத்தை கண்முன்னே காட்டுவது போல அமைந்தது.


Next Story

மேலும் செய்திகள்