இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,645 பேர் உயிரிழப்பு

இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,645 பேர் உயிரிழப்பு
இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,645 பேர் உயிரிழப்பு
x
இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 3,645 பேர் உயிரிழப்பு   

இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 645 பேர் உயிரிழந்துள்ளனர்.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி,கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 83 லட்சத்து 76 ஆயிரத்து 524 ஆக உயர்ந்துள்ளது.3 ஆயிரத்து 645 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து 4 ஆயிரத்து 832 ஆக அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 69 ஆயிரத்து 507 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில்,30 லட்சத்து 84 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இதுவரை 15 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்