நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது-மக்கள் அச்சம்
நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்குவதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்குவதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 56 லட்சத்து 16 ஆயிரத்து 130ஆக உயர்ந்துள்ளது.
2 ஆயிரத்து 23 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை
ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 553 ஆக அதிகரித்துள்ளது.
ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 457 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில்,
21 லட்சத்து 57 ஆயிரத்து 538 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை 13 கோடி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
Next Story