கோடிக்கணக்கில் பணம், தங்கம் பறிமுதல்... விசாரணை நடத்தி வரும் ஆந்திர போலீசார்

சென்னை தனியார் மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான கோடிக்கணக்கிலான பணம் மற்றும் தங்கம் ஆகியவை ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கில் பணம், தங்கம் பறிமுதல்... விசாரணை நடத்தி வரும் ஆந்திர போலீசார்
x
கோடிக்கணக்கில் பணம், தங்கம் பறிமுதல்... விசாரணை நடத்தி வரும் ஆந்திர போலீசார் 

சென்னை தனியார் மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான கோடிக்கணக்கிலான பணம் மற்றும் தங்கம் ஆகியவை ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பஞ்சலிங்க சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போத அந்த வழியாக வந்த காரை சோதனை செய்ததில் அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. 3 கோடியே 5 லட்ச ரூபாய் பணம், 55 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த ஆந்திர போலீசர் காரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த பணம், நகைகள் சென்னையை சேர்ந்த தனியார் மருத்துவ கல்லூரிக்கு சொந்தமானது என உறுதியான நிலையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

Next Story

மேலும் செய்திகள்