கேரள சட்டமன்றத் தேர்தல் : காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு... 91 இடங்களில் காங்கிரஸ் போட்டி

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் 91 இடங்களில் போட்டியிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள சட்டமன்றத் தேர்தல் : காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு... 91 இடங்களில் காங்கிரஸ் போட்டி
x
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் 91 இடங்களில் போட்டியிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், 81 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டனர் என்றும் கடந்த முறை பாஜக வென்ற நேமம் தொகுதியில் வலுவான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் கூறினார். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைமை நாளை டெல்லியில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


நேமம் தொகுதியில் போட்டி? "வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கும்" உம்மன் சாண்டி பதில்
 
கேரளாவில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்ற நேமம் தொகுதியில் வலுவான வேட்பாளரை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அங்கு முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை காங்கிரஸ் களமிறக்கலாம் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ள உம்மன் சாண்டி, கட்சி வேட்பாளரை அறிவிக்கும், அதுவரையில் பொறுத்திருங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 


கேரள சட்டமன்றத் தேர்தல் : காங்கிரஸ் கட்சியில் பாஜக டெபாசிட்...  முதல்வர் பினராயி விஜயன் பிரச்சாரம்

கேரளாவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியி எம்எல்ஏக்களை பாஜக எதிர்பார்த்துள்ளது செய்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் நகைச்சுவையாக கூறியுள்ளார். கண்ணூரில் பிரசாரம் செய்து பேசிய அவர், 35 தொகுதிகளில் வென்றால்கூட கேரளாவில் ஆட்சியமைத்துவிடலாம் என பாஜக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள் எனக் கூறினார். 71 தொகுதிகளில் வெற்றிப்பெறாமல் அவர்களால் எப்படி ஆட்சியமைக்க முடியும் எனக் கேள்வியை எழுப்பிய அவர், மீதம் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரசில் முதலீடு செய்துள்ளனர் என நகைச்சுவையாக பேசியுள்ளார். மேலும் இதையெல்லாம் அறிந்த கேரள மக்கள் இடதுசாரிகளுக்கே ஆதவளிப்பார்கள் எனக் கூறியுள்ளார்.


கேரள சட்டமன்றத் தேர்தல் : 25 ஆண்டுகளுக்கு பின்னர் பெண் வேட்பாளர்... இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  அறிவிப்பு

கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 25 வருடங்களுக்கு பின்னர் சட்டமன்றத் தேர்தலில் பெண் ஒருவர் போட்டியிட வாய்ப்பளித்திருக்கிறது. கட்சியின் பெண்கள் அணி தலைவர் நூர்பினா ராஷித்தை கோழிக்கோடு தெற்கு தொகுதியில் களமிறங்கியுள்ளது. கட்சியின் முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக கூறியிருக்கும் ராஷித், மக்கள் அதிகமான பெண்கள் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் எனக் கூறினார். இதற்கு முன்னதாக 1996 -ல் கமருன்நிஷா அன்வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோழிக்கோடு தொகுதியில் களமிறக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அசாம் பிரசார களம் சூடுபிடித்துள்ள நிலையில், 3 எஸ் என்ற திட்டத்தை முன்வைத்து பாஜகவும், 5-ஜி என்ற திட்டத்தை முன்வைத்து காங்கிரசும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்துக்கு 3 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வருகிற 27-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. ஆளும் பாஜக, பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி, பாரம்பரியம் மற்றும் நாகரிகம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்த 3-எஸ் திட்டத்தை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறது. மறுமுனையில் காங்கிரஸ் கட்சி, அசாமில் குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்குதல், தேயிலை ஊழியர்களின் ஊதிய உயர்வு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட 5-ஜி என்ற திட்டத்தை முன்வைத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளது.


அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு... அசாம் தேர்தல் களம் - பாஜக ஆலோசனை 

அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து அசாம் மாநில தலைவர்களுடன் பாஜக தலைமை ஆலோசனை நடத்தியது.அசாம் மாநில தேர்தலில் 126 இடங்களில் பாஜக கட்சி 92 இடங்களில் போட்டியிடுகிறது. இதுவரைக்கும் 73 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் அசாம் மாநிலத்திற்கான மூன்றாம் கட்ட வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்நிலையில், டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வீட்டில் வைத்து நடைபெற்ற ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜிதேந்திர சிங், அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஆகியோர் கலந்து கொண்டனர். 

  

Next Story

மேலும் செய்திகள்