அம்ரித் மகோத்சவ்' கொண்டாட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி குஜராத்தில் தொடங்கி வைத்தார்.
அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
x
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பிரதமர் மோடி குஜராத்தில் தொடங்கி வைத்தார்.
 

நாட்டின் 75-வது சுதந்திர தினம் 'அம்ரித் மகோத்சவ்' என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்கள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் வரலாற்று சிறப்புமிக்க தண்டி யாத்திரையை நினைவு கூறும் வகையில் குஜராத்தில் மீண்டும் யாத்திரை நடத்தப்படுகிறது. அபய் காட் மைதானத்தில் இருந்து தண்டி வரையில் 21 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம் தொடங்கியது. முன்னதாக சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற பிரதமர் மோடி காந்தி சிலைக்கு கதர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
==


Next Story

மேலும் செய்திகள்