உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு 58 ஆக உயர்வு

உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு 58 ஆக உயர்வு மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்
உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு 58 ஆக உயர்வு
x
நாட்டில் உருமாறிய கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்துக்கும் கீழாக உள்ள நிலையில், கேரளாவில் 6 பேருக்கு உறுமாறிய கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது மூலம் இந்த எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. உருமாறிய தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள 58 பேரும் இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உருமாறிய கொரோனா தொற்று பரவாமல் இருக்க தேவைாயன கண்டறிதல், சோதனை, தனிமைப்படுத்துதல் கடுமையாக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் அதிக கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்