பாப்புலர் நிதி நிறுவன மோசடி வழக்கு - மேலும் 2 பேர் குற்றவாளிகளாக சேர்ப்பு
பொதுமக்களிடம் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி செய்த வழக்கில் பாப்புலர் நிதி நிறுவன உரிமையாளர் டேனியல் தாமஸ் ராய், அவரது மனைவி பிரபா, மகள் ரினு உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொதுமக்களிடம் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி மோசடி செய்த வழக்கில் பாப்புலர் நிதி நிறுவன உரிமையாளர் டேனியல் தாமஸ் ராய், அவரது மனைவி பிரபா, மகள் ரினு உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்,. தற்போது இந்த வழக்கில் தாமஸ் டேனியல் தாயாரும் நிதி நிறுவன இயக்குநருமான எம்.ஜே.மேரிக்குட்டி மற்றும் பிரபாவின் சகோதரர் சாமுவேல் பிரகாஷ் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்,. மேரிக்குட்டி ஆஸ்திரேலியாவிலும் சாமுவேல் பிரகாஷ் கேரளாவிலும் உள்ளதாக கூறப்படுகிறது,. இந்த நிலையில் விசாரணைக் குழு தனது அறிக்கையை ஆலப்புழா உதவி அமர்வு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது,.
Next Story