சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த பாதிரியார்

கேரளாவில், சிகிச்சைக்கு வந்த இளம் பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டிய ரெஜி என்ற பாதிரியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த பாதிரியார்
x
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி கல்லர்குட்டி சாலையில் பாலக்காடு ஆயுர்வேத மருத்துவமனை வைத்துள்ளார், பாதிரியாரான ரெஜி. அந்த மருத்துவமனைக்கு,  வயிற்று வலிக்கு சிகிச்சை பெற 22 வயது இளம்பெண், தனது தாயுடன் வந்துள்ளார். தாயை தனியாக அமர வைத்த பாதிரியார் ரெஜி, இளம் பெண்ணுக்கு பரிசோதனை செய்யும் போது பாலியல் சீண்டல் ரீதியிலான செய்கையில் ஈடுபட்டுள்ளார். போதாக்குறைக்கு,  அந்தப் பெண்ணுக்காக பிரார்த்தனை செய்வதாக கூறிய பாதிரியார், அவரை உடல் ரீதியாக தொட்டு தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.வீடு திரும்பிய இளம் பெண், பாதிரியார் தன் உடலில் தவறான எண்ணத்தோடு கைகளை பரவவிட்டதை, உறவினர்களிடம் கண்ணீர் மல்க கூறினார். இதனால், ஆத்திரம் அடைந்து மருத்துவமனை வந்த பெண்ணின் உறவினர்கள், பாலியல் சீண்டல் பாதிரியார் ரெஜியை தாக்க முயன்றனர். 
தகவலறிந்து வந்த போலீசார், பெண் அளித்த புகாரின் பேரில், பாலியல் சீண்டல் பாதிரியார் ரெஜியை கைது செய்தனர். காவல்துறை அலுவலகம் அழைத்துச் சென்ற பாதிரியார் ரெஜி, சிறிது நேரம் முகத்தை மறைத்தும், பிறகு கம்பீரமாகவும் அமர்ந்தது, முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்ற பழமொழியை ஞாபகப்படுத்திச் சென்றது.


Next Story

மேலும் செய்திகள்