இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 96 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 96 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 96 ஆயிரத்து 551 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 45 லட்சத்து 62 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 209 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76 ஆயிரத்து 271 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, 9 லட்சத்து 43 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story