வங்கி ஏ.டி.எம்மில் கொள்ளையடிக்க முயற்சி - கொள்ளையன் தப்பி ஓட்டம்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நான்சாரா பகுதியில் தனியார் வங்கி, ஏடிஎம் செயல்பட்டு வருகிறது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நான்சாரா பகுதியில் தனியார் வங்கி, ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்மில் கடந்த 12 ஆம் தேதி அதிகாலை மர்ம நபர் ஒருவர் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஆனால், நீண்ட நேர முயன்றும் பணம் வராத காரணத்தால் மிஷினை உடைத்து பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது மிஷின் எழுப்பிய ஒலியால், அந்த மர்மநபர் தப்பி ஓடினார். காவலாளி இல்லாததால், இந்த கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story