புதுச்சேரி மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரேநாளில் 200 பேருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பானது, 3 ஆயிரத்து 806 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் 161 பேருக்கும், காரைக்காலில் 7 பேருக்கும், ஏனாமில் 32 பேருக்கும் தொற்று உறுதியானது. இதுவரை 2 ஆயிரத்து 309 பேர் குணமடைந்துள்ள நிலையில், தற்போது ஆயிரத்து 445 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்