மருத்துவ சேர்க்கையில், ஓ.பி.சி.க்கு 27% கோரி மனு - பொதுநல வழக்காக தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுரை

மருத்துவ மாணவர் சேர்க்கையில், ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு கோரிய மனுவை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ சேர்க்கையில், ஓ.பி.சி.க்கு 27% கோரி மனு - பொதுநல வழக்காக தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுரை
x
மருத்துவ மாணவர் சேர்க்கையில், ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு கோரிய மனுவை பொதுநல வழக்காக தாக்கல் செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் சிறுபான்மை சங்கத்தின் செயலர் கீதா, இதுதொடர்பாக ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், மருத்துவ மாணவர் சேர்க்கையில், அகில இந்திய இட ஒதுக்கீட்டில், 27 சதவிகிதம் வழங்க கோரிய மனுவை, பொதுநல வழக்காக தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்