"விமானங்களில் நடு இருக்கைகளை காலியாக வைக்க வேண்டும்" - விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க விமான நிறுவனங்களுக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க விமான நிறுவனங்களுக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்
உத்தரவிட்டுள்ளது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தற்போது, உள்நாட்டு விமான போக்குவரத்து 50-60 சதவீதம் வரை இயக்கப்படும் நிலை உருவாகி உள்ளதாக தெரிவித்தார். இது பன்னாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்கும் திறனை மேம்படுத்த உதவும் எனவும் தெரிவித்துள்ளார். விமானங்களில் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
Next Story