புதுச்சேரியில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா - சிறுவனின் தந்தைக்கு ஏற்கனவே பாதிப்பு உறுதி

புதுச்சேரியில் 9 வயது சிறுவன் உட்பட 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா - சிறுவனின் தந்தைக்கு ஏற்கனவே பாதிப்பு உறுதி
x
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், ஜிப்மர் மற்றும் கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து திரும்பிய பெரிய காலாப்பட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே போன்று, வில்லியனூரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் உட்பட மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை ஏற்கெனவே கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார். இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்