கொரோனா பரிசோதனைகளுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை

கொரோனா தொற்றை கண்டறிய ஆர்.டி-பிசிஆர் சோதனையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனைகளுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை
x
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 33 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8 ஆயிரத்து 373 பேர் குணமடைந்துள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் 67 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 75 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தவர்களின் விகிதம், 25 புள்ளி 19 சதவீதமாக உள்ளதாகவும், இறப்பு விகிதம் 3 புள்ளி 2 சதவீதமாக உள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையின் இரட்டிப்பு விகிதம் 11 நாட்களாக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார். 

சோதனை மற்றும் சிகிச்சை நெறிமுறையை பொருத்தவரை ஆர்டி-பிசிஆர் சோதனையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்