கொரோனா அச்சத்தால் 6 வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்த நபர்...

கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா அச்சத்தால் 6 வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்த நபர்...
x
கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை திடீரென மருத்துவமனையின் ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். கொரோனா தொற்று வந்தால் உயிர் பிழைக்க முடியாது என்று எண்ணி அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்