இந்திரா கேண்டீன் இலவச சேவை ரத்து - தவறாக பயன்படுத்தப்படுவதாக விளக்கம்
கர்நாடகாவில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் இந்திரா கேண்டீன் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் இந்திரா கேண்டீன் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தின் அம்மா உணவகம் போல், கர்நாடகத்தில் இந்திரா கேண்டீன் செயல்பட்டு வந்தது. ஊரடங்கு எதிரொலியாக அங்கு இலவச உணவு வழங்கப்பட்டுவரும் நிலையில், அந்தச் சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. தவறாக பயன்படுத்தப்படுவதால் நிறுத்தம் என நகர மேம்பாட்டு நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Next Story