சாலையில் திடீரென மோதிக்கொண்ட லாரிகள் - பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு
தெலங்கானாவில் லாரிகள் மோதிக் கொண்ட விபத்தின் போது, இடையில் சிக்கிய நபர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தெலங்கானாவில் லாரிகள் மோதிக் கொண்ட விபத்தின் போது, இடையில் சிக்கிய நபர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ரங்காரெட்டி மாவட்டம் போத்திரெட்டி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற லாரி மீது, பக்கவாட்டு திசையிலிருந்து வந்த மற்றொரு லாரி மோதி, ஒன்றன் மீது மற்றொன்று சாய்ந்தவாறு நின்றன. அப்போது, சாலையில் நடந்துசென்ற ஒருவர், லாரிகள் வருவதை கண்டு, அங்கிருந்து ஓடி நூலிழையில் உயிர் தப்பினார். அதிகாலையில் நடந்த இந்த பரபரப்பான சம்பவம் குறித்த சிசிடிவி பதிவு, தற்போது வெளியாகி உள்ளது.
Next Story