"ஜார்கண்ட் 4- வது கட்ட தேர்தல் : 57 % வாக்குப்பதிவு"

ஆட்சியை பிடிப்பது யார்? = டிச.23-ல் தெரியும்
ஜார்கண்ட் 4- வது கட்ட தேர்தல் : 57 % வாக்குப்பதிவு
x
81 தொகுதிகள் கொண்ட ஜார்கண்ட்டில், ஏற்கனவே, 3 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. 4 -வது கட்டமாக தியோகர், பொகாரோ, தன்பாத் மற்றும் கிரிடி ஆகிய 4 மாவட்டங்களில், 15 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய போதிலும், 5 தொகுதிகள், நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்தவை என்பதால், மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. எஞ்சிய 10 தொகுதிகளில், மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.  221 பேர் களத்தில் நின்ற, இந்த தேர்தலில், 57 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 5 - வது இறுதிக்கட்டமாக 16 தொகுதிகளுக்கு, வருகிற 20 - ம் தேதி தேர்தல் நடைபெறும். வருகிற 23 - ம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதால், ஜார்கண்டில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது, அன்று நண்பகலுக்குள் தெரிந்து விடும்.

Next Story

மேலும் செய்திகள்