"திருப்பதியில் பூரண மதுவிலக்கு செய்ய பரிந்துரை" - சேகர் ரெட்டி

திருப்பதியில் 200 ஏக்கரில் ஆன்மீக நகரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி கூறினார்.
x
திருப்பதியில் 200  ஏக்கரில் ஆன்மீக நகரம் அமைக்க ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி கூறினார். தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  திருமலையை போன்றே திருப்பதியிலும் பத்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு பூரண மதுவிலக்கு செய்ய மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். திருமலையில் அடுத்த ஆண்டு பொங்கல் முதல் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு  தடை விதிக்கப்பட உள்ளது என்றும் சேகர் ரெட்டி  கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்