பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அதிரடி சோதனை

சசிகலா தங்கவைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில், பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
x
சசிகலா தங்கவைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில், பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதிகாலை 5 மணி முதல் நடந்த இந்த சோதனையில், கைதிகளின் அறையிலிருந்து செல்போன்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இங்கு விதிமுறைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து, அதற்காக பல சிறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று திடீரென அதிரடி சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்