"விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் : 2021 டிசம்பரில் நிறைவேற்றப்படும்" - இஸ்ரோ சிவன்
ககன்யான் திட்டம் இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமையும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ககன்யான் திட்டம் இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமையும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஐஐடி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக அவர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ககன்யான் திட்டத்தின் முதல் கட்டமாக 2020ஆம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்கலம் ஒன்று விண்ணுக்கு அனுப்பப்படும் என்றும், 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய விண்கலத்தின் மூலம் இந்தியரை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும் கூறினார்.
Next Story