ஜெய்ஷ்- இ-முகமது தீவிரவாதிகள் மிரட்டல் : கோவில் - ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு

24 மணி நேரமும் உஷார் நிலை : தீவிர கண்காணிப்பு
ஜெய்ஷ்- இ-முகமது தீவிரவாதிகள் மிரட்டல் : கோவில் - ரெயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு
x
அடுத்த மாதம் அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் தசரா விழாவின் போது, நாசவேலையில் ஈடுபட ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாதிகள் இயக்கம் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து, ஜெய்ஷ் - இ- முகமது இயக்க தீவிரவாதி மசூத் அகமது பெயரில், அரியானா மாநிலம் ரோதக் ரெயில்வே போலீஸூக்கு இந்த மிரட்டல் கடிதம் வந்துள்ளது. சென்னை, பெங்களூரு, மும்பை உள்பட 12 ரெயில் நிலையங்களில் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்போவதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால், கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி, முடுக்கி விடப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்