எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவோண விழா கோலாகலம்
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவோண விழா நடைபெற்றது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவோண விழா நடைபெற்றது. அலுவலக வளாகத்தில் பலவண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு அலங்கரித்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் சுபாஷ் பாடல் பாடியதும், துணை ஆட்சியர் ஹாரீஷ் கவிதை வாசித்ததும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
களைகட்ட தொடங்கியது ஓணம் பண்டிகை
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைகட்ட தொடங்கியது. நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், நடைபெற்ற ஓணம் நிகழ்ச்சியில் அத்தப்பூ கோலங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து நடனமாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
Next Story