சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு - முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் கைது

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான D.K. சிவக்குமார் கைது செய்யப்பட்டார்.
சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு - முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் கைது
x
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான D.K. சிவக்குமார் கைது செய்யப்பட்டார். சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. புதுடெல்லியில் உள்ள சிவக்குமார் வீட்டில் இருந்து 8 கோடியே 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 4 நாட்களாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையின் முடிவில் டி.கே. சிவக்குமாரை கைது செய்த அமலாக்கத்துறை , புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளது.

டி.கே. சிவக்குமார் கைது : காங். தொண்டர்கள் தள்ளுமுள்ளு



டி.கே. சிவக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிராக தலைநகர் டெல்லியில், காங்கிரஸ் தொண்டர்கள், திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு வந்த போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள், தள்ளு முள்ளு- மோதலில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.



Next Story

மேலும் செய்திகள்