"மத்திய அரசு அனுமதியுடன் மேகதாதுவில் அணை கட்டப்படும்" - கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா உறுதி

மத்திய அரசு அனுமதியுடன் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்
மத்திய அரசு அனுமதியுடன் மேகதாதுவில் அணை கட்டப்படும் - கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா உறுதி
x
கர்நாடகா மேல் சபையில் நிதி மசோதாவை தாக்கல் செய்த முதலமைச்சர் எடியூரப்பா,  கிருஷ்ணா மற்றும் காவிரி நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்து உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்து பேசினார்.  அப்போது பெங்களூரு குடிநீர் பிரச்சினையை போக்க மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசின் அனுமதியுடன் மேகதாதுவில்  கண்டிப்பாக அணை கட்டப்படும் என்றும் கூறினார்.  இதில் இருந்து பின்வாங்க மாட்டோம் என உறுதியளித்த அவர்,  அணை கட்டும் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.  இது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்