சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விரைவில் அறிமுகம் - மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முரளிதரன் தகவல்

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகளை விரைவில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விரைவில் அறிமுகம் - மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் முரளிதரன் தகவல்
x
பாஸ்போர்ட் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் இதனை தெரிவித்துள்ளார். கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகளை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், விண்ணப்பதாரரின் அனைத்து விவரங்களும் அந்த சிப்பில் பதியப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனை திருத்தவோ, அழிக்கவோ முடியாது என்றும், இந்த இ-பாஸ்போர்ட்டுகளை தயாரிக்க நாசிக்கில் உள்ள இந்திய பாதுகாப்பு அச்சகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு 1 கோடியே 12 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்