போலீசாரை தாக்க முயன்ற செம்மரக்கடத்தல் கும்பல் : 8 பேரை கைது செய்த போலீசார்

ரூ.30 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
போலீசாரை தாக்க முயன்ற செம்மரக்கடத்தல் கும்பல் : 8 பேரை கைது செய்த போலீசார்
x
ஆந்திர மாநிலம், கடப்பா வனப்பகுதியில் போலீசாரை தாக்க முயன்ற, செம்மரக் கடத்தல் கும்பலை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். கடப்பா மாவட்டம், ரயில்வே கோடூரு அருந்ததிவாடா வனப்பகுதியில், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது,  ரோந்து பணிக்கு வந்த போலீசாரை, அவர்கள் சுற்றி வளைத்து தாக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து செம்மரக்கடத்தல் கும்பலை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் மற்றும் மரம் வெட்டப் பயன்படுத்திய கோடாலிகளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்