சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் - கேரள மக்களை பாஜக ஏமாற்றுவதாக சசிதரூர் குற்றச்சாட்டு

சபரிமலை விவகாரத்தில், கேரள மக்களை பா.ஜ.க. ஏமாற்றுவதாக, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் குற்றம்சாட்டி உள்ளார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் - கேரள மக்களை பாஜக ஏமாற்றுவதாக சசிதரூர் குற்றச்சாட்டு
x
சபரிமலை விவகாரத்தில், கேரள மக்களை பா.ஜ.க. ஏமாற்றுவதாக, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து தமது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்,சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பான தனது கேள்விக்கு,மத்திய சட்டத்துறை அமைச்சர், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது என்று  தெரிவித்துள்ளதாக கூறினார். மேலும்,சபரிமலையின் பாரம்பரியத்தையும், சடங்குகளையும், பாஜக பாதுகாக்கும் என்று கூறுவது கேரள மக்களை ஏமாற்றும் செயல் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்