ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரம்...

"டி.ஜி.பி.யின் சுற்றறிக்கையை தீவிரமாக பின்பற்ற வேண்டும்"
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரம்...
x
தமிழகத்தில் நாட்டுப்புற கலை மற்றும் கலைஞர்களை பாதுகாக்கும் வகையில், திரைப்பட ஆடல், பாடலுக்கு நிரந்தர தடை விதிக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.  இந்த மனு மீதான விசாரணையின் போது ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. 12 நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதாக அரசு சார்பில்,  தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதில் டிஜிபியின் சுற்றறிக்கையை காவல்துறையினர் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்