விடுதலை புலிகள் இயக்கத்துக்கு, மத்திய அரசு நோட்டீஸ்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை , சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், தடை செய்வது குறித்து விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள் இயக்கத்துக்கு, மத்திய அரசு நோட்டீஸ்
x
விடுதலை  புலிகள் இயக்கம் , இந்தியாவில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ்,  1987 ஆம் ஆண்டிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விடுதலை புலிகள் இயக்கத்தை சட்ட விரோத இயக்கம் என்று அறிவிக்க போதுமான காரணம் உள்ளதா, இல்லையா என விசாரணை செய்வதற்காக  டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா சேகல் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விடுதலை புலிகள் இயக்கத்தை சட்ட விரோத இயக்கமாக அறிவிக்கக் கூடாது என்பதற்கான காரணத்தை  விசாரணை நீதிபதியிடம் நேரில் விளக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.  
இந்த மாதம்11 ஆம் ஆம் தேதி அறிவிப்பு வெளியான நிலையில்,  விளக்கம் அளிக்க, ஜூலை 26ம் தேதி வரை, கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை அமைப்பின் சார்பில், தமிழக அரசு இந்த பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்