12 அடி பள்ளத்தில் விழுந்த 2 குழந்தைகள் - சிகிச்சை பலனின்றி, ஒரு குழந்தை உயிரிழப்பு

இரு குழந்தைகளில் மோக்‌ஷிதா என்ற 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
12 அடி பள்ளத்தில் விழுந்த 2 குழந்தைகள் - சிகிச்சை பலனின்றி, ஒரு குழந்தை உயிரிழப்பு
x
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் 2 குழந்தைகள் விளையாடும் போது, தவறி 12 அடி பள்ளத்தில் விழுந்தன. மண் சரிந்து விழுந்ததால் இஇரண்டு குழந்தைகளும் உயிருக்கு போராடின. இது குறித்து கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் அதிகாரிகள் விரைந்து வந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டனர். குழாய்கள் புதைப்பதற்காக தோண்டப்பட்ட இந்த பள்ளத்தில் இருந்து 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், இரு குழந்தைகளும் மீட்கப்பட்டன. உடனடியாக ராமதீர்த்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இரு குழந்தைகளில், மோக்‌ஷிதா என்ற 3 வயது  குழந்தை சிகிச்சை பலனின்றி  இறந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்