புற்றுநோய் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழையின் மருத்துவ செலவுக்காக அரசு சார்பில் 20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார்.
புற்றுநோய் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி
x
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஏழையின் மருத்துவ செலவுக்காக  அரசு சார்பில் 20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டார். அவர் விசாகப்பட்டினத்திற்கு சென்று விட்டு காரில் விமான நிலையம் திரும்பும் போது வழியில் சில இளைஞர்கள் கோரிக்கை பதாகைகளுடன் நிற்பதை கண்டு காரை நிறுத்த  சொன்னார்.நீரஜ் குமார் என்ற ஏழை புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளதாகவும், இம்மாத இறுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பணம் தேவைப்படுவதாகவும் அந்த இளைஞர்கள்  ஜெகன் மோகன் ரெட்டியிடம் தெரிவித்தனர். அதற்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட ஜெகன் மோகன் ரெட்டி அரசின் சார்பில்  20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டார்

Next Story

மேலும் செய்திகள்