ஆற்றில் மூழ்கிய கேரள இளைஞர்கள் 3 பேர் பலி...

கூழாங்கற்களை எடுக்க இறங்கிய கேரள இளைஞர்கள் 3 பேர் ஆற்றில் மூழ்கி பலி.
ஆற்றில் மூழ்கிய கேரள இளைஞர்கள் 3 பேர் பலி...
x
தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள கோதையாறு பகுதிக்கு, கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் சுற்றுலா சென்றனர். அவர்களில் ஒருவர் அங்குள்ள ஆற்றில் கூழாங்கற்களை எடுக்க முயன்றபோது, நிலை தடுமாறி பள்ளமான பகுதியில் விழுந்துள்ளார். மற்ற இருவரும் அவரை மீட்க முயன்றபோது அவர்களும் தண்ணீரில் மூழ்கினர். இதைக் கண்ட அப்பகுதியினர் மூவரையும் தேடிய நிலையில், அவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவரது பெயர் விஷ்ணு என்பதும், மற்ற இருவரின் விபரம் தெரியாத நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்