குழந்தையின் மூச்சை நிறுத்தி கொலை செய்த தாய்

கேரளாவில் ஒன்றே கால் வயது பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
குழந்தையின் மூச்சை நிறுத்தி கொலை செய்த தாய்
x
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே பட்டணக்காடு பகுதியை சேர்ந்த ஆதிரா என்ற பெண்ணின் ஒன்றே கால் வயது பச்சிளம் குழந்தை கடந்த 29-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தது. இது குறித்து கேரள போலீசார் தாய் ஆதிராவிடம் நடத்திய தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தூக்கத்திற்கு தொல்லையாக இருந்ததால் குழந்தையை மூச்சை நிறுத்தி கொலை செய்ததாக தாய் ஆதிரா கூறியுள்ளார். இதனையடுத்து ஆதிராவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்