ராகுல் காந்தி உயிருக்கு ஆபத்து - உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அக்கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதுப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி உயிருக்கு ஆபத்து - உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்
x
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அக்கட்சியின் சார்பில் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதுப்பட்டுள்ளது. கடிதத்துடன் வீடியோ ஆதாரம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அமேதி தொகுதியில் நேற்று ராகுல் காந்தி செய்தியாளர்களை  சந்தித்த போது அவரை நோக்கி  லேசர் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் பாதுகாப்பு குறைபாடு காரணமாக கொல்லப்பட்டதாகவும் கடிதத்தில் குறிப்பிடுப்பட்டுள்ளது. எனவே ராகுல் காந்திக்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் முன்னுரிமை அளித்து வழங்க வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்