கிங்பிஷர் நிறுவனக் கடனை திருப்பி அளிக்கத் தயார் : விஜய் மல்லையா மீண்டும் ட்விட்டர் பதிவு

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி அளிக்கத் தயாராக இருப்பதாக விஜய் மல்லையா கூறியுள்ளார்
கிங்பிஷர் நிறுவனக் கடனை திருப்பி அளிக்கத் தயார் : விஜய் மல்லையா மீண்டும் ட்விட்டர் பதிவு
x
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி அளிக்கத் தயாராக இருப்பதாக விஜய் மல்லையா கூறியுள்ளார்.தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.அதற்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள  நிலையில் மல்லயா ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில் ,இந்திய பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடன் அனைத்தையும் நீதிமன்றம் மூலம் திருப்பி செலுத்தத் தயாராக இருப்பதாகவும்,வங்கிகள் அந்த தொகை ஏன் மறுக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் நிதி நெருக்கடிகளை சமாளிக்க அந்த தொகை உதவும் என்றும் விஜய் மல்லையா கூறியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்