"தமிழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நீரை வழங்க வேண்டும்" - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் அதிகாரிகளுக்கு உத்தரவு

கோடை காலம் தொடங்கி உள்ளதால் தமிழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தண்ணீரை திறந்து விடுவதில் எந்த சிக்கலும் ஏற்படக் கூடாது என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி கே சிவகுமார் நீர்வளத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நீரை வழங்க வேண்டும் - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் அதிகாரிகளுக்கு உத்தரவு
x
கோடைகாலம் தொடங்க உள்ளதையடுத்து தண்ணீர் சேமிப்பு மற்றும் முறையான பங்கீடு தொடர்பாக கர்நாடக நீர்வள துறை அதிகாரிகளுடன் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார்  பெங்களூருவில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, தேர்தல் நடைபெற உள்ளதாலும், கோடைகாலம் தொடங்கியுள்ளதாலும் தண்ணீர் விவகாரத்தை வைத்து எந்த பிரச்சனையும் எழுந்துவிடக்கூடாது என்று அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார். மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை முறையாக கொடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு டி.கே.சிவகுமார் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்