சாலை நடுவே தீப்பற்றி எரிந்த கார்

காருக்குள் சிக்கிய ஓட்டுனர் உதவ முன்வராத மக்கள் : உயிரோடு எரிந்த கார் ஓட்டுனர்
சாலை நடுவே தீப்பற்றி எரிந்த கார்
x
தெலங்கானாவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் காருக்குள் சிக்கிய ஓட்டுனர் உயிரோடு தீக்கிரையான பரிதாப சம்பவம் அரங்கேறியுள்ளது.தெலங்கானாவின், சங்காரெட்டி மாவட்டம், சுல்தான்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. காருக்குள் சிக்கிய ஓட்டுனர் கார் கதவை திறக்க முடியாமல் போராடிய நிலையில், வேடிக்கை பார்த்த மக்கள் யாரும் உதவ முன்வரவில்லை என தெரிகிறது. இதனால் ஓட்டுனர்  காருக்குள்ளேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார். பரபரப்பான சாலையில், நிகழ்ந்த இந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்