சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசார் - ஐ.நா.வில் விரைவில் தீர்மானம்

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐக்கிய நாடுகள் சபையில் பிரான்ஸ் விரைவில் தீர்மானம் கொண்டு வரும் என பிரான்ஸ் தூதர் கூறினார்.
சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் மசூத் அசார் - ஐ.நா.வில் விரைவில் தீர்மானம்
x
பெங்களூரு-வில் சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது. இதில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்ரே ஜூக்லர் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், ரபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக தனக்கு எதுவும் தெரியாது என்றார். இது மிகச்சிறந்த விமானம் எனக் குறிப்பிட்ட அலெக்ஸாண்ரே ஜூக்லர், இன்னும் 6 மாதத்தில் இந்திய விமான படையில் ரபேல் சேர்க்கப்படும் என தெரிவித்தார். காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை, சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐக்கிய நாடுகள் சபையில் பிரான்ஸ் விரைவில் தீர்மானம் கொண்டு வரும் என அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்