நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் தற்கொலை முயற்சி...
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நீதிமன்ற வளாகத்தில் பூச்சி மருந்து குடித்து வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கர்னூல் மாவட்டம் நந்தியால் நீதிமன்றம் வளாகத்தில் வழக்கறிஞர் அணில் என்பவர் பூச்சி மருந்து அருந்திய நிலையில் மயங்கி சரிந்துள்ளார். இதனையடுத்து சக வழக்கறிஞர்கள் அவரை மீட்டு சிகிச்கைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூச்சி மருத்து அருந்துவதை செல்போனில் அவர் படம் பிடித்துள்ளார்.
Next Story