"மருத்துவ காப்பீடு திட்டத்தில் 7 லட்சம் பேர் பயன்" - மோடி பேச்சு

"பாதுகாவலனை சந்திக்க பலர் தயங்குகிறார்கள்"
மருத்துவ காப்பீடு திட்டத்தில் 7 லட்சம் பேர் பயன் - மோடி பேச்சு
x
மோடி என்ற பாதுகாவலனை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் பலர் ஒதுங்கிச் செல்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் மோடி,  பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கிய 100 நாட்களுக்குள், ஏழை மக்கள் 7 லட்சம் பேர் சிகிச்சைப் பெற்று உள்ளதாக கூறினார். நாட்டின் காவலாளியான தம்மை, நேருக்கு நேர் சந்திக்க பலர் தயங்குவதாக தெரிவித்த பிரதமர் மோடி, தமது அரசில் யாரும் ஊழல் செய்ய முடியாது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்